search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம்
    X

    வேலூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம்

    • கலெக்டர் தகவல்
    • அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    வேலுார்:

    தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்க ளில், வெடிப்பொருட்கள் விதிகள் 2008-ன் கீழ், வேலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையா ளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தோடு, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கட்ட டத்துக்கான வரைபடம் (சொந்த இடமாக இருப்பின், பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்த ப்பத்திரம்), உரிமத்துக்கான கட்டணம் செலுத்தி யதற்கான அசல் சலான், மனுதாரர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×