என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெங்களூருக்கு செல்லும் 44 பஸ்கள் ஒசூர் வரை இயக்கம்
- பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது
- கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கை
வேலூர்:
காவிரி பிரச்சினையால் கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்லும் அரசு பஸ்கள் இன்று காலை முதல் தமிழக எல்லையான ஒசூர் பகுதி வரை இயக்கப்படுகிறது.
அதன்படி வேலூர் போக்குவரத்து மண்ட லத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து பெங்களூருக்கு செல்லும் 44 அரசு பஸ்கள் இன்று வழக்கமான நேரத்தில் இயக்கப்பட்டன.
இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதில் முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story






