என் மலர்
வேலூர்
வேலூர்:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி வேளாண் அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் பெறப்பட்டன.
வேலூர் மாவட்டத்திலும் இதுகுறித்த புகார்கள் பெறப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவபர்கள் பலரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போன்று போலி முகவரி கொடுத்து 2 கட்ட தவணைத்தொகையை பெற்றிருப்பது தெரியவந்தது.
இதன் இறுதி அறிக்கை, சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு கிராமத்திலும் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் குறித்து விசாரித்ததில், 90 சதவீதம் போலியான முகவரிகளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வரையில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதில் முதல்கட்டமாக 25 லட்சம் திரும்ப பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வேளாண் ஊழியர்கள் உள்பட 17 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த முறைகேடு திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதிக அளவில் நடந்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.18 கோடி முறைகேடு நடந்து இருக்கலாம் என விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை அளித்து முறைகேடாக நிதி உதவியை பெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் இத்திட்டத்தில் பயன்பெற்ற நபர்களின் உண்மை தன்மையை விசாரணை செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதையொட்டி ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மோசடியாக நிதி உதவியை பெற்றவர்களிடமிருந்து ரூ.2 கோடி வரை திரும்ப வசூலித்திருப்பதாக வேளாண்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி ஜீவாவை திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் ஜீவா 100க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாகவும், விவசாயி அல்லாதவர்களுக்கும் நிதியை வாங்கிக் கொடுத்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.
தண்டராம்பட்டு பகுதியில் கிசான் சம்மான் திட்டத்தில் 2,488 நபர்களின் வங்கிக் கணக்கில் கடந்த 1-ந் தேதி தலா ரூ 2000 செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சரண் தலைமையில் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
வாணாபுரம், தண்டராம்பட்டு, பெருங்குளத்தூர், தானிப்பாடி, ரெட்டியார் பாளையம் ஆகிய கிராமங்களில் இயங்கிவரும்வங்கிகளில் மேற்கண்ட 2,488 நபர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு வங்கி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் அவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டது. அவர்கள் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை காண்பித்து தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிரதமரின் நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,352 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,510 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 10,085 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,388 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). அ.ம.மு.க. மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி ஜெயந்தி (35), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்
ரமேஷூம், ஜெயந்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயந்தி ஆம்பூர் அடுத்த சோலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஜெயந்தியின் தாய் சரஸ்வதி (65) ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அதே பகுதியில் பாலாற்றிற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் ரமேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். ரமேஷ் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகிய 2 பேரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இவர்களது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அதில் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து கூலிப்படை ஏவி ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ரமேஷின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி உறவினர்களான மிட்டாளத்தை சேர்ந்த கவுதம் (20). ரங்காபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனுஷ்ராஜ் (23) மேலும் கூலிப்படையான மிட்டாளத்தை சேர்ந்த ராமன் (23), செதுவாலையை சேர்ந்த விக்னேஷ்(26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதமே கார் விபத்து ஏற்படுத்தி ரமேசை கொலை செய்ய திட்டமிட்டு ரமேஷ் மீது காரை ஏற்றினர். ஆனால் ரமேஷ் அதிலிருந்து தப்பித்து விட்டார்.
அதன்பின்னர் கடந்த 28-ந்தேதி ரமேசை மது குடிக்க அழைத்து சென்று போதை தலைக்கேறியதும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து பாலத்தின் கீழ் பிணத்தை வீசி சென்றனர்.
கொலையான ரமேஷின் மனைவி ஜெயந்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ரமேஷ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்வதில்லை. குடித்து விட்டு என்னை அடித்து கொடுமைப்படுத்துவார்.
எனது சம்பள பணத்தையும் எடுத்து கொள்வார். செல்போன் அழைப்பு வந்தாலும் சந்தேகப்பட்டு ஆபாச வார்த்தையில் பேசுவார்.
குடிபோதையில் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார். இதனால் அவரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,081 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,225 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,837 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் வேலூர் லாங்குபஜாரில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், 3 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியனாது. அதையடுத்து அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரிகள் கடையில் பணிபுரிந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மண்டித்தெருவில் உள்ள கடை வியாபாரிக்கு சளி, இருமல் அறிகுறி காணப்படடன. அவரின் பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து கடை ஊழியர்கள், குடும்பத்தினர் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்கள் என்று 4 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்பூரில் உள்ள தோல்தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றும் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர், குடியாத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர், வேலூர் நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் நபர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
அதைத்தவிர வேலூர் காந்திரோட்டை சேர்ந்த 3 வயது ஆண்குழந்தை, சத்துவாச்சாரியில் 5 வயது ஆண்குழந்தை, விருபாட்சிபுரத்தில் 90 வயது முதியவர், தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 28 பேர் என்று மாவட்டம் முழுவதும் 142 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 10,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்கள் திறக்க அனுமதியும், அதன்பின்னர் சில நாட்களில் நகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உடைய வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வழிபாடு செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த அனைத்துக் கோவில்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தவற்காக குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் போடப்பட்டுள்ளது.
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வேலூர் கோட்டை சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுகிறது. பொதுமக்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலுக்கு செல்ல கோட்டை திறக்கப்பட்டிருக்கும் என்றும், பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேவாலயங்கள், மசூதிகளிலும் இன்று முதல் வழிபாடு நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது 36). விண்ணம்பள்ளி கொடுக்கந்தாங்கல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு லாரன்ஸ் (35) இருவரும் நண்பர்கள்.
இவர்கள் வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பிரபு லாரன்சை கொன்று புதைத்ததாக கூறி வானாபாடி கிராம நிர்வாக அலுவலரிடம் சசிகுமார் சரணடைந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
நானும் பிரபு லாரன்சும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வோம்.
அவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்தது.
கடந்த மே மாதம் 25 ந்தேதி அம்மூர் லாலாபேட்டை சாலையில் வானாபாடி அருகே உள்ள தனியார் நிலத்தில் மது அருந்தினோம். அப்போது பிரபுலாரன்ஸிடம் என் மனைவியுடனான கள்ளத்தொடர்பு குறித்து கேட்டேன்.
இதில் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் பிரபு லாரன்சின் தலையில் பீர் பாட்டிலால் பலமாகத் தாக்கினேன். மேலும் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன்.
யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் உடலை புதைத்து விட்டேன் என்றார்.
இதையடுத்து நேற்று மாலை பிரபு லாரன்ஸ் புதைக்கப்பட்ட இடத்தை சசிகுமார் அடையாளம் காட்டினார்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலையில் பிரபு லாரன்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு உடற்கூறுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக சசிகுமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் பெரியாங்குப்பம் காந்திநகர் எம்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அம்சவேணி (வயது 60). வேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அம்சவேணி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஊரடங்கு என்பதால் கடையை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார்.
நள்ளிரவில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வீடு முழுவதும் கடையில் இருந்த மூக்குப்பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை எழுந்த அம்சவேணி பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் அம்சவேணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






