என் மலர்
செய்திகள்

கொலை
ராணிப்பேட்டை அருகே வாலிபர் கொன்று புதைப்பு- கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
ராணிப்பேட்டை அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கைதான நண்பர், மனைவியுடனான கள்ளத்தொடர்பால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது 36). விண்ணம்பள்ளி கொடுக்கந்தாங்கல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு லாரன்ஸ் (35) இருவரும் நண்பர்கள்.
இவர்கள் வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பிரபு லாரன்சை கொன்று புதைத்ததாக கூறி வானாபாடி கிராம நிர்வாக அலுவலரிடம் சசிகுமார் சரணடைந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
நானும் பிரபு லாரன்சும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வோம்.
அவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்தது.
கடந்த மே மாதம் 25 ந்தேதி அம்மூர் லாலாபேட்டை சாலையில் வானாபாடி அருகே உள்ள தனியார் நிலத்தில் மது அருந்தினோம். அப்போது பிரபுலாரன்ஸிடம் என் மனைவியுடனான கள்ளத்தொடர்பு குறித்து கேட்டேன்.
இதில் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் பிரபு லாரன்சின் தலையில் பீர் பாட்டிலால் பலமாகத் தாக்கினேன். மேலும் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன்.
யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் உடலை புதைத்து விட்டேன் என்றார்.
இதையடுத்து நேற்று மாலை பிரபு லாரன்ஸ் புதைக்கப்பட்ட இடத்தை சசிகுமார் அடையாளம் காட்டினார்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலையில் பிரபு லாரன்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு உடற்கூறுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக சசிகுமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது 36). விண்ணம்பள்ளி கொடுக்கந்தாங்கல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு லாரன்ஸ் (35) இருவரும் நண்பர்கள்.
இவர்கள் வழிப்பறி செயின் பறிப்பு கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பிரபு லாரன்சை கொன்று புதைத்ததாக கூறி வானாபாடி கிராம நிர்வாக அலுவலரிடம் சசிகுமார் சரணடைந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
நானும் பிரபு லாரன்சும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்வோம்.
அவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்தது.
கடந்த மே மாதம் 25 ந்தேதி அம்மூர் லாலாபேட்டை சாலையில் வானாபாடி அருகே உள்ள தனியார் நிலத்தில் மது அருந்தினோம். அப்போது பிரபுலாரன்ஸிடம் என் மனைவியுடனான கள்ளத்தொடர்பு குறித்து கேட்டேன்.
இதில் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் பிரபு லாரன்சின் தலையில் பீர் பாட்டிலால் பலமாகத் தாக்கினேன். மேலும் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன்.
யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் உடலை புதைத்து விட்டேன் என்றார்.
இதையடுத்து நேற்று மாலை பிரபு லாரன்ஸ் புதைக்கப்பட்ட இடத்தை சசிகுமார் அடையாளம் காட்டினார்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலையில் பிரபு லாரன்ஸின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு உடற்கூறுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக சசிகுமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






