என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police man attack"

    காட்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி மாலீயபட்டு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதையொட்டி விழா குழுவினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பனமடங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஊர் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ்காரர் சதீஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 6 இளைஞர்கள் சரமாரியாக சதீஷை தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 27) ராணுவ வீரர். அவரது சகோதரர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடிவருகின்றனர்.
    போலீஸ்காரரை சாலையில் தள்ளிவிட்டதுடன், போதையில் இருந்ததாக போலியான சான்றிதழ் பெற்றது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த தர்மன் தனது தாயின் இறுதிச் சடங்குக்கு செல்ல இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் விடுப்பு கேட்டார். அவர் விடுமுறை கொடுக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த தர்மன் வாக்கி டாக்கியில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அவர் குடிபோதையில் பேசியதாக கூறப்பட்டதால் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

    போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான தர்மன் தன்னிலை விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த அன்று பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ்காரர் தர்மனை கீழே தள்ளி விபத்தை ஏற்படுத்திய காட்சி பதிவாகி இருந்தது. அதுமட்டுமின்றி கீழே விழுந்த தர்மனை தூக்கி வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி போதையில் இருந்ததாக சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் போக்குவரத்து போலீசில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார்.
    பரங்கிமலையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைதானார்கள். மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் உளவுத்துறை போலீஸ்காரராக பணிபுரிபவர் ராஜசேகர். அவர் நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மடுவாங்கரை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது 3 பேர் சேர்ந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரை அடித்து உதைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்த ராஜசேகர் தனதுமோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அவர்களை காப்பாற்ற நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றார்.

    உடனே அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அருகே இழுத்து சென்று 3 பேரும் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30), சந்திரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். நவீன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
    ×