என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் சம்சு மொய்தின் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதன்படி ஏராளமானோர் ஏஜென்ட் மூலமாக செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் சீட்டு நிறுவனர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

    மேலும் அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனியார் சீட்டு நிறுவனர் சம்சு மொய்தினை கைது செய்தனர்.

    இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் அவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க ப்படவில்லை.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி -ஆரணி சாலையில் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் தனியார் சீட்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மேலும் உயர் அதிகாரிகளிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வாகனங்கள் அணிவகுத்து நின்றன
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர்.

    14-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது எதிரே வந்தவாகனத்திற்கு வழி விட முயன்றபோது மலையில் இருந்து கிழே இறங்கிய கார் மீது தனியார் பள்ளி பஸ் உரசியது.

    இத னால் பஸ் செல்ல முடியாமல் கொண்டை ஊசி வளைவில் நின்றது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • நகராட்சி கமிஷனர் உத்தரவு
    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை திருவண்ணாமலை நகரத்தில் உள்ள இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு உத்தரவின்படி அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

    • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலித் மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை வகித்தார். இளஞ்சி றுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார்.

    மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர்.

    • அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது
    • மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதுநாள் வரை கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிவகுப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அக்டோபர் 6-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன்பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். அக்டோபர் மாதம் 6-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும்நேரடி சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    • சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையுடன், ரத உற்சவம் நடைபெற்றது.

    இந்த ரத உற்சவத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். இன்னொரு மாலையை தங்களுக்கு திருமணம் வேண்டி சாமிக்கு அணிவித்து வாங்கிச் சென்றனர்.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் அவதி
    • சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர் ணமியை முன்னிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டன.

    கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்கள் அனைத்தும் நகரத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

    வெளியூர் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களிலேயே பார்க்கிங் இடமாக பயன்படுத்தி, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருனர்.

    சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.

    அதேபோல் கிரிவல பாதை மற்றும் நகர பகுதிக்குள் செல்ல ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே ஆட்டோ செல்ல வேண்டும் என அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    ஆனால் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் ஒருசில ஆட்டோக்கள் கிரிவல பாதையில் பொது மக்களுக்கு இடையூறாக ஆங்காங்கே சுற்றி திரிந்தன.

    நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, மற்றும் இறக்குவது போன்ற போக்குவரத்து அத்து மீறல்களில் ஈடுபட்டனர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    பவுர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலை நகர பகுதியில் ஏராள மானோர் குவிந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சன்னதி தெரு, மாடவீதி, திருமஞ்ச கோபுர வீதி, சின்ன கடைத்தெரு, கொச மடத்தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு, அய்யங்குளத் தெரு உள்ளிட்ட அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலும் போக்கு வரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் துறையினர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    களம்பூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 46) இவர்க ளுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லதா திருமலை கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பு சரியாக எரியவில்லை என எண்ணெய் ஊற்றியபோது லதா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை சிகிச் சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலெக்டர் உத்தரவு
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணி யிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென் னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண் ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

    • அழகான பெண் குழந்தைகள் பிறந்தன
    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    திருவண்ணாமலை அருகே நல்லான்பி ள்ளைபெற்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு பிரசவ வலி தொடர்பான அவசர அழைப்பு வந்தது.

    உடனடியாக ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இயங்கும் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பிரபு மற்றும் டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    பின்னர் சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மனைவி ஆண்டாள் (வயது 29) என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றனர்.

    அவலூர்பேட்டை பைபாஸ், வடஆண்டாப்பட்டு ரெயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஆண்டாளுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் கார்த்திகேயனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் ஆண்டாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாய், குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    மீண்டும் அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது.

    இந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அங்கு சென்று மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சரண்யா (25) என்பவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    சோமாசிபாடி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, சரண்யாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் சரண்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்பு தாய், குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    • இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது
    • 14 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்

    வேங்கிக்கால்:

    புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச லேஸ்வரரை வலம் வந்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 6.41 மணிக்கு தொடங்கி இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    அரசு விடுமுறை தினம் என்பதால் கடந்த மாத பவுர்ணமியை காட்டிலும் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.

    காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து வழிபட்டனர்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் தினமும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை இல்லாததால் பக்தர்கள் சிரமம் இன்றி கிரிவலம் வந்தனர்.

    அருணாசலேசுவரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்து றையினர் ஈடுபட்டனர்.

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    ×