search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern struggle"

    • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலித் மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை வகித்தார். இளஞ்சி றுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார்.

    மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர்.

    • சுடுகாட்டுக்கு பாதை அமைக்ககோரி நடத்தினர்
    • விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டு க்குப்பாதை அமைத்து தரக்கோரி பாடை கட்டி ஊர்வலமாக வந்து நூதன முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வரு வாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் ஒரு வாரத்தில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர விட்டால் வாக்காளர் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து போ ராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனால் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • 24-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகளின் 10- அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என 24-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுசெயலாளர் நேதாஜி, இயற்கை விவசாயி அலெக்ஸ், இயற்கை வாழ்வியல் வல்லுநர் வத்தலக்குண்டு சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.

    வேப்பிலை மந்திரிப்பு செய்து கோரிக்கை வைத்தனர், விவசாயிகள் அரைநிர்வாணத்துடனும், கோவணத்துடனும் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது
    • இயற்கை பாதிக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி மக்களில் சிலர் தலைகீழாக நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • துர்நாற்றம் வீசுவதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வெங்களாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான நீர்நிலை பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் நகராட்சி சார்பில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளது என கூறி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் குப்பை மேட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பேசியதை தொடர்ந்து குப்பைகள் வாரப்படும். என உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • அ.தி.மு.க.வினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, கிராமம் மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குறவன் இனத்துக்கு பட்டியலின வகுப்பு (எஸ்சி) சான்றுக்கு ஆன்லைன் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    தொடர்ந்து மாணவ மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் கண்ணை கட்டி தவளை போல் தவழ்ந்து வந்து உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் நேற்று 6,வது நாளாக தூக்கு கயிறு மாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அதிமுக கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என் திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் கே. எம். சுப்பிரமணியம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சிவப்பிரகாசம் வருவாய்த் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் போராட்டக்காரர்களிடம் நகர செயலாளர் டி.டி. குமார் பேசியபோது:

    குறவன் சாதி சான்றிதழ் அதிமுக ஆட்சியில் கேட்டிருந்தால் தாங்கள் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மூலம் கூறி அதற்கான நடவடிக்கை எடுத்து வழங்கி இருப்போம், தங்களுக்கு சான்றிதழ் கிடைக்க அதிமுக சார்பில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கவனத்திற்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றனர். தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கேட்டு தூக்கு கயிறு மாட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ரம்பா கிருஷ்ணன், டிடிசி சங்கர், ஆர் நாகேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நெற்றியில் நாமம் போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ஆல்வின், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் லோகேஷ், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தேவதாஸ் சிறப்புரையாற்றினார்.

    ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தால் இயக்கப்படும் தனியார் பஸ்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் நோயாளிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் ஆட்டோ தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாண்டஸ் புயல் பாதிப்பை கணக்கெடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மைதுறையினர் கணக்கெ 2 டுக்க வலியுறுத்தி நேற்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

    3 அப்போது விவசாயிகள் கையில் தூக்கு கயிறு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்கான விண்ணப்ப படிவத்துடன் வந் திருந்தனர். பின்னர் அவர்கள் மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும், விவசாயிகளை கடனாளியாக்கி தற்கொலைக்கு தள்ளக்கூடாது என்பன உள் 4 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சம்பா நெல் அறுவடை, வாழை மகசூல் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே புயல் பாதிப்புகளை வேளாண்மைதுறையினர் கணக்கெடுக்க வேண்டும். லாபகர மான விலை கொள்முதல் செய்யாததாலும், வெள்ளம், வறட்சி பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு, இழப்பீடு வழங்காததாலும் விவசாயிகள் கடனாளியாகி தற்கொலை செய்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு பயிர் மற்றும் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தவணை தவறும் முன்னர் புதுப்பிக்க கடன்தாரருக்கு தெரி யப்படுத்தாமல் அசல் கடனுடன் வட்டி, அபராத வட்டி இணைத்து மேலும், மேலும் கடன் சுமை ஏற்றுகின்ற நடவடிக் கையால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது என்றார்.

    இதில் நார்த்தாம்பூண்டிசிவா துரிஞ்சாபுரம் அய்யாயிரம், பாலானந்தல் பிரபு, சொரகுளத்தூர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை வசதி கேட்டு நடந்தது
    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேரும் சகதியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மெய்யூரில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சேரும் சகதியுமாக உள்ள சாலையில் ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை வசதி கேட்டு ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குண்டும் குழியுமாக இருந்தால் ஆத்திரம்
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் சாலைகள் போடப்படாததால் குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மோசமான சாலை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் சேரும் சகதியுமாக உள்ளன.அதனால் பொதுமக்கள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

    இது குறித்து அங்குள்ள கிராம மக்கள் பலமுறை மனுக்கள் மற்றும் புகார் அளித்தும் சாலைப்போடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பொது மக்கள் தெருக்களில் மழைநீர் நிரம்பிய பள்ளங்களில் மரக்கன்றுகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொம்மிகுப்பம் உட்பட மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன . மழைக்காலத்தில் எங்கள் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பொம்மிக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கிராமத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திருப்பத்தூர் செல்கின்றனர்.

    இங்கிருந்து ஒரு சில பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலைகள் சரியாக இல்லாத பஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனை உள்ள திருப்பத்தூருக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    சிறிது நேரம் மழை பெய்தாலும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.

    எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ள ப்படவில்லை, தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கும் போதெல்லாம் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறோம்.இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×