search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை கண்டித்து நூதன போராட்டம்
    X

    நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை கண்டித்து நூதன போராட்டம்

    • துர்நாற்றம் வீசுவதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வெங்களாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான நீர்நிலை பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் நகராட்சி சார்பில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளது என கூறி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் குப்பை மேட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பேசியதை தொடர்ந்து குப்பைகள் வாரப்படும். என உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

    Next Story
    ×