search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைகீழாக நின்று கிராம மக்கள் நூதன போராட்டம்
    X

    தலைகீழாக நின்று கிராம மக்கள் நூதன போராட்டம்

    • திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது
    • இயற்கை பாதிக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி மக்களில் சிலர் தலைகீழாக நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×