search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai Krivalam"

    • அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
    • பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.

    பக்தர்கள் கிரிவலம் வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். ஒன்று கார்த்திகை தீபத் திருநாளன்று, மற்றொன்று தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று.

    அண்ணாமலையார் திருக்கோவிலில் வீற்றிருக்கும் செந்தூரப் பிள்ளையார், கம்பத்து இளையனார் (முருகன்), கருவறையில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையை வணங்கி, கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தின் முன் நிற்க வேண்டும். அங்கிருந்து கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    கிரிவலம் செல்வதற்கு முன்தினம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தமான ஆடை அணிந்து, விபூதி பூசி, தானம் கொடுத்து, மலையைச் சுற்ற வேண்டும். காலணி அணிதல் கூடாது. பயம், கோபம், சோகம், குடும்பப் பிரச்னைகளை கோவிலின் முன் உள்ள பலிபீடத்தில் விட்டுவிட வேண்டும். வாகனங்களில் செல்லுதல், உரக்க சத்தம் போட்டு பேசுதல், கையை வேகமாக வீசி நடத்தல் கூடாது. ஒரு பத்துமாத கர்ப்பிணி பெண் எண்ணெய் குடத்தை தலையில் சுமந்துகொண்டு செல்வதைப் போல கிரிவலம் வரவேண்டும். சிவநாமம், பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.

    • இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது
    • 14 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்

    வேங்கிக்கால்:

    புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச லேஸ்வரரை வலம் வந்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 6.41 மணிக்கு தொடங்கி இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    அரசு விடுமுறை தினம் என்பதால் கடந்த மாத பவுர்ணமியை காட்டிலும் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.

    காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து வழிபட்டனர்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் தினமும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை இல்லாததால் பக்தர்கள் சிரமம் இன்றி கிரிவலம் வந்தனர்.

    அருணாசலேசுவரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்து றையினர் ஈடுபட்டனர்.

    • கலெக்டர் வேண்டுகோள்
    • பவுர்ணமியை முன்னிட்டு ஆய்வு கூட்டம் நடந்தது

    வேங்கிக்கால்:

    ஆவணி மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.05 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவசமாக சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்ய வேண்டும்.

    கோவில் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான வழிப்பாதைகளை முறையாக அமைக்க வேண்டும்.

    மருத்துவ துறையினர் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவல பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

    கிரிவலப் பாதையை நகராட்சி துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை நகராட்சியுடன் இணைந்து சாலை யோர ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். போக்கு வரத்து துறையின் சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை அமைத்து தர வேண்டும். காவல் துறையின் மூலமாக கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

    துணி பை

    பொதுமக்கள், பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கிரிவலம் வரும் பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினி, அறநிலை யத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • லால் சலாம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சென்றனர்
    • பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது

    திருவண்ணாமலை:

    பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் லால்சலாம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற வேண்டி கிரிவலம் சென்றனர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு குவிந்தனர்
    • கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.

    கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    ×