என் மலர்
நீங்கள் தேடியது "Full Moon Chariot Festival"
- உட்பிரகார உலா நடந்தது
- ஏராளமானோர் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரர் ரத உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
- பவுர்ணமி ரத உற்சவம் நடைபெற்றது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமி ரத உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேசுவரர் ரத உற்சவம் நடைபெற்றது.
இதில் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் சாமிக்கு இரண்டு மாலைகளை அணிவித்து, அதில் ஒரு மாலையை தங்கள் கழுத்தில் போட்டுக் கொண்டு திருமணம் நடைபெற வேண்டி வணங்கினர்.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு
- அன்னதானம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையுடன், ரத உற்சவம் நடைபெற்றது.
இந்த ரத உற்சவத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமிக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். இன்னொரு மாலையை தங்களுக்கு திருமணம் வேண்டி சாமிக்கு அணிவித்து வாங்கிச் சென்றனர்.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






