search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
    X

    சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

    • வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    களம்பூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 46) இவர்க ளுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லதா திருமலை கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பு சரியாக எரியவில்லை என எண்ணெய் ஊற்றியபோது லதா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை சிகிச் சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×