என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • டாக்டர் எ.வ.ேவ.கம்பன் வழங்கினார்
    • அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் தூய்மை அருணை இயக்கம் பல்வேறு தூய்மை பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பின் அமைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இருந்து வருகிறார்.

    இந்த அமைப்பின் சார்பில் அண்ணாமலையார் தெப்பல் உற்சவம் நடை பெறும் அய்யங்குளத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது திருவண்ணா மலை நகரின் தூய்மை பணிக்கு உதவிடும் வகையில் தூய்மை அருணை அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளுக்கும் தலா ஒரு குப்பை சேகரிக்கும் வாகனம் என 40 லட்ச ரூபாய் மதிப்பில் 39 குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூய்மை அருணை அமைப்பின் மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் குப்பை சேகரிக்கும் வாகனங்களின் சாவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.

    நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, தூய்மை அருணை மேற்பார்வை யாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன், ப்ரியா விஜயரங்கன், நகர மன்ற துணைத்தலைவர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, வக்கீல் சீனிவாசன், ஏ.ஏ.ஆறுமுகம், ஷெரீப், நகர மன்ற உறுப்பினர் கோபி சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வாகன தணிக்கையில் சிக்கினார்
    • 3 பைக்குகள் பறிமுதல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அம்மா பாளையம் கூட்டு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆரணி அருகே உள்ள பழங்காமூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் 3 பைக்குகளை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 3 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வருவாய் துறையினர் சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் மஞ்சுளா தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் வேலூர் திருவண்ணாமலை சாலையில் ஆற்று மணலுடன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி முயன்றனர்.

    ஆனால் வருவாய் துறையினரை பார்த்ததும் டிப்பர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

    இதைத்தொடர்ந்து 2 யூனிட் ஆற்று மணலை கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மணலுடன் கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் தாசில்தார் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.

    இவர் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து அந்த நிறுவனத்தின் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் முன் விரோதமா, பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஏற்பாடுகள் தீவிரம்
    • வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த மாத இறுதி வாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மாநில அளவிலான 3 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

    அதனை முதல்-அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

    மேலும், திருவண்ணாம லையில் மண்டல அளவிலான தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான ஆயத்த பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானதத்ல் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அதை ஒட்டி, விழா நடைபெற உள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைத்தல், உணவு அரங்கம் உள்ளிட்ட வசதிகளை செய்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வின் போது, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், எம்.பி. சி.என். அண்ணா துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவ ணன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செய லாளர் பிரியா விஜயரங் கன், துரை வெங்கட். எம். ஆர். கலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கலேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. மனைவி இந்திரா (வயது 52). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆரணி அடுத்த கீழ்பட்டு பகுதியில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக இன்று காலை ஆட்டோவில் இந்திரா சென்றார்.

    சேத்பட்ரோட்டில் வரும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த இந்திரா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    ஆட்டோ டிரைவர் உள்பட உடன் பயணித்த வர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் இந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றதும், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணத்தினால் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ராஜகோபுரம் வழியாக பொது தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசன பாதையில் செல்லும் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்கு மட்டும் இன்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென் சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    மேலும் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவி லில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

    இந்த கோவிலில் சிறிய இடுக்கு போன்று உள்ள பாதை வழியாக படுத்தவாறு சென்று வெளியேறி அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்வார்கள்.

    இதற்காக நேற்று இடுக்கு பிள்ளையார் கோவில் அருகிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இடுக்கு பிள்ளையாரை வழி பட்டனர்.

    • 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள சாத்தம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. மனைவி தீபா, மகன் விஷ்வா (வயது 7). மகள் காவியா (5).

    ஏழுமலை மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுடன் விஷ்வா, காவியா சென்றிருந்தனர். அந்த விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே அமர்ந்து சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் தீபா மாடுகளை கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தபோது விஷ்வாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவியாவிடம் விஷ்வா எங்கே என்று கேட்டார்.

    விஷ்வா கிணற்றின் அருகே சென்றதாக காவியா கூறினார். இதனால் பெற்றோர் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். அப்போது விஷ்வா கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தெள்ளார் தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி விஷ்வாவை பிணமாக மீட்டனர்.

    உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள பி.எல்.தாண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீராம் (வயது 26). நேற்று நள்ளிரவு ஜெய்ஸ்ரீராம் அவரது நண்பர்களான சுனில்(21), பாலாஜி(26) ஆகியோருடன் பைக்கில் பி.எல்.தண்டா பகுதியிலிருந்து செங்கம் நோக்கி சென்றனர். முறையாறு அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெய்ஸ்ரீராம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஜெய்ஸ்ரீராமை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வசதியாக, அனக்காவூர், எச்சூர் ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல் அனக்காவூர், மேல்மா, மகாஜனம்பாக்கம், அனக்காவூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2.77 லட்சம் மதிப்பில் 3 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டு இருந்தன.

    இந்த நிகழ்ச்சி அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமைத் தாங்கினார்.

    செய்யாறுஒ.ஜோதி எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் பங்கேற்று டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகளை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதில் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதிகா குமாரசாமி, கனிமொழி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், அனக்காவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், மோ.ரவி, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
    • 697 பேர் பயணடைந்தனர்

    வேங்கிக்கால்:

    புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் 161 புதிய உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆயிரத்து 697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினர்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார். பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

    • ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
    • தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் நெல் பயிரிடு வதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது 2 மாடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் 2 மாடுகளும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்ட சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாடுகளை பார்த்து சென்றனர்.

    ×