search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security murder"

    • படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.

    இவர் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து அந்த நிறுவனத்தின் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் முன் விரோதமா, பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர்.
    • மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61).

    இவர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிறிஸ்துதாசியின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து கிறிஸ்துதாஸ் மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரது மகள் ஜான்சி மருமகன் பாக்யராஜ் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கிறிஸ்துவதாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். கிறிஸ்து தாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கிறிஸ்துதாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். கிறிஸ்துதாசின் மருமகனிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின்னர் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாக்யராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    நான் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருவேன். அப்போது எனது மாமனார் உடன் மது அருந்துவது வழக்கம். நேற்று இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு ஆயிரம் பணம் கேட்டார். அப்போது நான் அவரிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் நான் அங்கிருந்து சென்று விட்டேன். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது என்னிடம் அவர் பணம் கேட்டதால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து அந்த பகுதியில் கிடந்த கம்பியால் அவரை தாக்கினேன். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கம்பியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். இதைத்தொடர்ந்து எனது மனைவியுடன் எனது மாமனார் பாக்யராஜ் மயங்கி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் கைது செய்யப்பட்ட பாக்யராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாமனாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கும்பளம் ஊராட்சிக்குட்பட்ட கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் திப்பையப்பா (வயது42). இவர் கும்பளம் காட்டுபகுதி அருகே ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி துளசி.

    இந்த நிலையில் திப்பையப்பா தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் இருந்து தோட்டத்து காவலுக்கு சென்றார்.

    இதையடுத்து இன்றுகாலை திப்பையப்பா தோட்டத்துக்கு செல்லும் பாதையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    முதல் கட்ட விசாரணையில் தலையில் கல்லை போட்டு திப்பையப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. காட்டுப்பகுதியில் மர்ம பர்கள் இரவு இந்த சம்பவத்தை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

    இந்த கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    காட்பாடி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் (40). இவர் சேவூரில் உள்ள இந்தியன் உணவுக்கிடங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேதாஜி நேற்று இரவு 8 மணியளவில் சேவூரில் உள்ள பொது இடத்தில் வைத்து மது அருந்தினார்.

    அப்போது அங்கு வந்து அருளும் மது அருந்தி உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

    அப்போது நேதாஜி மதுபோதையில் அருளின் கையில் கடித்தார். அதனால் வலியில் துடித்த அருள் ஆத்திரம் அடைந்து நேதாஜியை சரமாரியாக கைகளால் தாக்கினார்.

    பின்னர் அவரின் தலையை பிடித்து அருகேயுள்ள சுவரில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நேதாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருளை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே தங்கையுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த ஆலம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 9-ந் தேதி இரவு வீட்டு மாடியில் இருந்து சிவகுமார் கீழே விழுந்து கிடந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மது போதையில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சிவகுமார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனையில் சிவகுமார் வி‌ஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிவகுமாரின் மனைவி சந்திராவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும், அதே பகுதியில் வசிக்கும் தங்கை மாரியம்மாளும் சேர்ந்து சிவகுமாருக்கு மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக தெரிவித்தார்.

    கொலை குறித்து சந்திரா போலீசில் கூறும்போது, “கணவர் சிவகுமார் அடிக்கடி தங்கை மாரியம்மாளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    எனவே கணவர் சிவகுமாரை தீர்த்து கட்ட நாங்கள் முடிவு செய்தோம். வழக்கமாக சிவகுமார் வீட்டு மாடியில் மது குடிப்பது வழக்கம். கடந்த 9-ந்தேதி இரவு அவர் வாங்கி வைத்திருந்த மதுவில் வி‌ஷத்தை கலந்து வைத்தோம். இதனை தெரியாமல் அவர் குடித்து மயங்கினார்.

    உடனே நானும், தங்கை மாரியம்மாளும் சேர்ந்து கணவர் சிவகுமாரின் கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கொலையை மறைப்பதற்காக வீட்டு மாடியில் இருந்து உடலை கீழே தள்ளிவிட்டோம்.

    அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் மதுபோதையில் சிவகுமார் கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகமாடினோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சந்திராவையும், மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×