search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே மது போதை தகராறில் காவலாளி அடித்து கொலை
    X

    கொலை செய்யப்பட்ட கிறிஸ்துதாஸ்- கைது செய்யப்பட்ட பாக்கியராஜ்

    திருவட்டார் அருகே மது போதை தகராறில் காவலாளி அடித்து கொலை

    • கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர்.
    • மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61).

    இவர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிறிஸ்துதாசியின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து கிறிஸ்துதாஸ் மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரது மகள் ஜான்சி மருமகன் பாக்யராஜ் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கிறிஸ்துவதாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். கிறிஸ்து தாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் மகளும் மருமகனும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கிறிஸ்துதாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். கிறிஸ்துதாசின் மருமகனிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின்னர் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாமனாரை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய மருமகன் பாக்யராஜை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாக்யராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    நான் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருவேன். அப்போது எனது மாமனார் உடன் மது அருந்துவது வழக்கம். நேற்று இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு ஆயிரம் பணம் கேட்டார். அப்போது நான் அவரிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். பின்னர் நான் அங்கிருந்து சென்று விட்டேன். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது என்னிடம் அவர் பணம் கேட்டதால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து அந்த பகுதியில் கிடந்த கம்பியால் அவரை தாக்கினேன். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த கம்பியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். இதைத்தொடர்ந்து எனது மனைவியுடன் எனது மாமனார் பாக்யராஜ் மயங்கி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் கைது செய்யப்பட்ட பாக்யராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாமனாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×