search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே தலையில் கல்லை போட்டு காவலாளி கொலை
    X

    சூளகிரி அருகே தலையில் கல்லை போட்டு காவலாளி கொலை

    • தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கும்பளம் ஊராட்சிக்குட்பட்ட கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் திப்பையப்பா (வயது42). இவர் கும்பளம் காட்டுபகுதி அருகே ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி துளசி.

    இந்த நிலையில் திப்பையப்பா தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் இருந்து தோட்டத்து காவலுக்கு சென்றார்.

    இதையடுத்து இன்றுகாலை திப்பையப்பா தோட்டத்துக்கு செல்லும் பாதையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    முதல் கட்ட விசாரணையில் தலையில் கல்லை போட்டு திப்பையப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. காட்டுப்பகுதியில் மர்ம பர்கள் இரவு இந்த சம்பவத்தை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

    இந்த கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×