என் மலர்
நீங்கள் தேடியது "Lending ceremony"
- ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம்/ ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், பாரதிதாசன், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
- 697 பேர் பயணடைந்தனர்
வேங்கிக்கால்:
புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் 161 புதிய உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆயிரத்து 697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார். பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.






