என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1.84 கோடி கடன் வழங்கும் விழா
- ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம்/ ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், பாரதிதாசன், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






