என் மலர்
திருவண்ணாமலை
- வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது
- பக்தர்களுக்கு அழைப்பு
வேங்கிக்கால்:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
நவராத்திரி 2-ம் நாள் விழாவில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3-ம் நாளில் கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4-ம் நாளில் மனோன்மணி அலங்காரத்திலும், 5-ம் நாளில் ரிஷப வாகன அலங்காரத்திலும், 6-ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7-ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8-ம் நாள் லிங்க பூஜை அலங்காரத்திலும், 9-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.
அக்டோபர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை அன்று காலை பராசக்தி அம்மன் அபிஷேகமும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறும்.
நவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டி.வி.எஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
- சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
- ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொ கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்.
கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.
வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு சென்று ஆரோக்கி யமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில் 12 ஆயிரத்து 714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க மாக தான் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- செய்யாறில் அரசு சார்பில் நடந்தது
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர்கள் திலகவதி ராஜ்குமார், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். விழாவில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா பங்கேற்று கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து, விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் தடுப்பூசி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் நகராட்சி கவுன்சி லர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் என்.சங்கர், எம்.தினகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர், தில்லை.வீ.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
- வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
- டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தில் குடிநீர் குழாய் வைத்து, மூடப்பட்டுள்ளது.
தற்போது வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்காமல், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமலும் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் குறுகலாக உள்ள அனைத்து தெருக்களில் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.
பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கண்ணமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறும்போது:-
இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியை பார்வையிட டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
இதனால் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதன் பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.
- கம்பத்தில் மாடுகளை கட்ட சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த அக்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. மனைவி இந்திரா (வயது 48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் இவர்கள் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாடுகளை வீட்டின் அருகே இருந்த மின்கம்ப த்தில கட்டுவதற்காக இந்திரா சென்றார்.
அப்போது அதில் இருந்த மின்சாரம் இந்திரா மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த இந்திராவின் கணவர் மற்றும் உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் இந்திராவின் அண்ணன் மாரிமுத்து புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடுகளை மின் கம்பத்தில் கட்டுவதற்காக சென்ற போது பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்ற துணை தலைவர் சபரிகிரிசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாடக மேடை அமைப்பது, நரசிங்க புரத்தில் பழுதடைந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டுவது, பள்ளி வளாகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைப்பது, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைப்பது, மண்டபகுளம் பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், மலைமேடு அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு, எம்ஜிஆர் நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகள் அமைப்பது முக்கிய இடங்களில் கேமரா வைக்க முடிவு மற்றும் மலைமேட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தடைமட்ட நீர் தொட்டி அமைப்பது, நரசிங்கபுரம் விரிவாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வது என்பது உள்பட 46 தீர்மானங்கள் குறித்தும் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் தீர்மானங்கள் பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான்ஜெயபால், ஒன்றிய பணி மேற்பா ர்வையாளர் புஷ்பராணி , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
- அதிகாரி நடவடிக்கை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.
இதன் கட்டுப்பாட்டில் அதே கிராமத்தில் கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் மூலம் ரேசன் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் விற்பனையாளராக செங்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 48) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சரியான முறையில் போடவில்லை என்று மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மணிவண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
அதன் அடிப்படையில் வங்கி செயலாளர் அண்ணா மலை விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய 2,500 கிலோ அரிசி, 100 கிலோ பருப்பு ஆகியவை பொதுமக் களுக்கு வழங்காமல் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.
அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அரிசி பருப்பு வழங்காமல் விற்பனை செய்த சுரேஷ் குமாரை கடந்த 30-ந் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் இன்று முதல் 7 -ந்தேதி காலை போட்டி தொடங்குவதற்குமுன்பு வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்பு சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்குகாஞ்சி ரோடு சந்திப்பு முதல் அவலூர்பேட்டை ரோடு பிரிவு வழியாக விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் முதல் (அவலூர்பேட்டை ரோடு பிரிவு) மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும்போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 4 முதல் 10 ஆம் இடம் வரை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.
போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 74017 03484 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- வருகிற 7-ந்தேதி நடக்கிறது
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.செயற் குழுக்கூட்டம் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை வகிக்கிறார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அ.ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் வருகிற 21,22-ந் தேதிகளில், தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை வருகை குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி குழுவின் அலைபேசி எண்களை முறைப்படுத்துதல், கூட்டுறவு சங்கத்தேர்த லுக்கான புதிய உறுப்பினர் சேர்த்தல், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், சென்னை மகளிர் அணி மாநாடு மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். எனவே மாநில அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). கட்டிட ஒப்பந்ததார ராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பவானி, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர் வந்தவாசியில் இருந்து கீழ் சாத்த மங்கலம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர், இவரது மோட் டார்சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரகுராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது
- பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காரிய மேடை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தமது சொந்த செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6,66,700 வரைவோலையாக வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷிடம் வழங்கினார்.
மேலும் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் ரூ.2.66 மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட ரூ.66 ஆயிரம் மதிப்பில் டிடி யும் வழங்கப்பட்டது என பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தெரிவித்தார்.
அப்போது உதவி செயற்பொறியாளர்கள் வேலூர் அம்சா, திருவண்ணாமலை செங்குட்டுவன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் ஷபிலால், துணை தலைவர் வி.குமார் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை அமைக்கப்படுகிறது
- முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் பாதசாரிகள் அவதி
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
முதற்கட்டமாக மேல மாடவீதி பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முதல் பெரிய தெரு வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக சென்று வந்த பொதுமக்கள் தற்போது கீழ மாடவீதியான திருவூடல் தெரு, தேரடி தெரு, சின்ன கடைத்தெரு வழியாக பஸ் நிலையம் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், வட்டார போக்குவரத்துஅலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலமாடவீதி சிமெண்ட் சாலை பணிகள் முடிவடையாத நிலையில் பெரிய தெரு சந்திப்பில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவில் முதல் காந்தி சிலை வரை உள்ள 110 மீட்டர் தூரம் கீழ மாட வீதியில் சாலை அமைக்கும் பணிக்காக நேற்று காலை முதல் சின்ன கடைத்தெரு சாலை அடைக்கப்பட்டது.
இதனால் எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலமாடவீதி சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்தார்.
ஆனால் சின்ன கடைத்தெருவில் சாலை பணிக்காக மூடப்படும் என்ற எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் நேற்று காலை மூடப்பட்டது.
நகரின் முக்கிய போக்குவரத்து சாலையான சின்ன கடைத்தெரு சாலை திடீரென மூடப்பட்டதால் நகரில் பெரும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்ட கான்கிரீட் சாலை பணிகளை மேல மாட வீதியில் பணிகள் முடிந்த பிறகு கீழ மாட வீதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரிவல பக்தர்கள் சின்ன கடைத்தெரு வழியாகத்தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






