நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காரிய மேடை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தமது சொந்த செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6,66,700 வரைவோலையாக வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷிடம் வழங்கினார்.

மேலும் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் ரூ.2.66 மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட ரூ.66 ஆயிரம் மதிப்பில் டிடி யும் வழங்கப்பட்டது என பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தெரிவித்தார்.

அப்போது உதவி செயற்பொறியாளர்கள் வேலூர் அம்சா, திருவண்ணாமலை செங்குட்டுவன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் ஷபிலால், துணை தலைவர் வி.குமார் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com