search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரசிங்கபுரத்தில் கிராம சபை கூட்டம்
    X

    நரசிங்கபுரத்தில் கிராம சபை கூட்டம்

    • 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்ற துணை தலைவர் சபரிகிரிசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாடக மேடை அமைப்பது, நரசிங்க புரத்தில் பழுதடைந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டுவது, பள்ளி வளாகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைப்பது, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைப்பது, மண்டபகுளம் பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், மலைமேடு அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு, எம்ஜிஆர் நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகள் அமைப்பது முக்கிய இடங்களில் கேமரா வைக்க முடிவு மற்றும் மலைமேட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தடைமட்ட நீர் தொட்டி அமைப்பது, நரசிங்கபுரம் விரிவாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வது என்பது உள்பட 46 தீர்மானங்கள் குறித்தும் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    பின்னர் தீர்மானங்கள் பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான்ஜெயபால், ஒன்றிய பணி மேற்பா ர்வையாளர் புஷ்பராணி , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×