என் மலர்
நீங்கள் தேடியது "டிராக்டர் விபத்து"
- உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாபட்டு பகுதி யைச் சேர்ந்தவர் சேகர். இவ ரது மனைவி செல்வி (வயது 40). இவரும் உறவினர்களான குமார் மற்றும் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் வரகூரில் உள்ள உறவினரின் விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார்.
வாணாபுரத்தில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி கூடலூர் அருகே வந்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செல்விபடுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). கட்டிட ஒப்பந்ததார ராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பவானி, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர் வந்தவாசியில் இருந்து கீழ் சாத்த மங்கலம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர், இவரது மோட் டார்சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரகுராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






