search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி
    X

    மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி

    • ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
    • தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் நெல் பயிரிடு வதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது 2 மாடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் 2 மாடுகளும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்ட சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாடுகளை பார்த்து சென்றனர்.

    Next Story
    ×