வாகனம் மோதி வாலிபர் சாவு

3 வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் போலீசார் விசாரணை
வாகனம் மோதி வாலிபர் சாவு
Published on

புதுப்பாளையம்:

செங்கம் அருகே உள்ள பி.எல்.தாண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீராம் (வயது 26). நேற்று நள்ளிரவு ஜெய்ஸ்ரீராம் அவரது நண்பர்களான சுனில்(21), பாலாஜி(26) ஆகியோருடன் பைக்கில் பி.எல்.தண்டா பகுதியிலிருந்து செங்கம் நோக்கி சென்றனர். முறையாறு அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெய்ஸ்ரீராம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஜெய்ஸ்ரீராமை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com