என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமைகலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பேசும் போது கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 317 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாமில் தினமும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தடுப்பூசிசெலுத்தி கொள்கின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 30-ம் தேதி வரை நடந்த முகாம்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டநபர்களில் மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 717 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1,602 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
அதேபோல் 44 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 893 பேர் முதல் தவணைதடுப்பூசியும், 37 ஆயிரத்து 477 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், ஆர்.டி.ஓ. வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கர் (வயது 33) கூலி வேலை செய்து வந்தார்.
பாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி பிரிந்து சென்றதால் பாஸ்கர் தந்தை தட்சணாமூர்த்தி, தாய் பவானி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் தந்தை தட்சிணாமூர்த்தி தாய் பவானியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனால் பாஸ்கர் வீட்டில் இருந்த ரேசன் கார்டை எடுத்து சென்று அடமானம் வைத்து பணம் வாங்கினார். அந்த பணத்தில் மது குடித்தார்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாஸ்கரிடம் தாய் பவானி ரேசன் கார்டை எங்கே என்று கேட்டார். அப்போது பாஸ்கர் குடிபோதையில் தாயை தாக்கினார்.
இதனை பார்த்த தட்சணாமூர்த்தி ஆத்திரமடைந்தார். அங்கிருந்த இரும்பு ராடால் பாஸ்கரை தாக்கினார்.இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பாஸ்கர் சுருண்டு விழுந்து இறந்தார்.
மகன் இறந்ததை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர்.
பின்னர் தட்சணாமூர்த்தி களம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). பொக்லைன் ஓட்டி வந்தார். இவரது மனைவி இந்துமதி (34). இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கண்ணன்-இந்துமதி ஆகிய இருவரும் தங்கள் வீட்டிலேயே ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினர்.
உறவினர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரது பிணத்தையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா? இல்லை இச்சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உமாதேவி (9) என்கிற மகளும், விக்னேஷ் (7) என்கிற மகனும் உள்ளனர். பொற்றோரை இழந்து அவர்கள் தவித்து வருகின்றனர்.






