என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கண்ணமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து- டிரைவர் பலி

    கண்ணமங்கலம் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    ஆந்திர மாநிலம், பலமனேர் அருகே உள்ள ரெண்டகுல்லா கிராமத்திலிருந்து திண்டிவனம் நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் கண்ணமங்கலம் அருகே ஆரணி செல்லும் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜப்பா (வயது 52) சம்பவ இடத்திலேயே பலியானார். கிளினர்ராக சென்ற சுப்பிரமணி (50) லேசான காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் ராஜப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×