search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    போளூரில் பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலி

    போளூரில் பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் அருகே தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35), பெயிண்டர். இவர் போளூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவர் வீட்டில் கடந்த 2-ந் தேதி பெயிண்டு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது 7 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவருக்கு போளூரில் முதலுதவி அளித்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×