என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 185 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 185 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளார். நேற்று வரை 49 ஆயிரத்து 524 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 1,114 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 599 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
Next Story






