என் மலர்
செய்திகள்

கைது
போளூர் அருகே மது, சாராயம் விற்ற 3 பேர் கைது
போளூர் அருகே மது, சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாவடி தெருவில் மதுபான பாட்டில்கள் விற்ற சாந்தி (வயது 59) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டுப்பட்டி தெருவில் சாராயம் விற்ற வசந்தி (65) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று பெருமாள்பேட்டை கிராமத்தில் மது விற்ற முருகன் (43) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






