என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்2 July 2021 1:13 PM GMT (Updated: 2 July 2021 1:13 PM GMT)
ஆரணி அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- ஜெயகாந்தி என்பவரின் மகன் பாலமுருகன். இவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகள் உமாசங்கரி (வயது 26) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
பாலமுருகன் சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த உமாசங்கரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் மாமியார் ஜெயகாந்தி, மாமனார் தனசேகரன் ஆகியோர் ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசுக்கும், உமாசங்கரியின் பெற்றோருக்கும் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரி தற்ெகாலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் ஆரணி உதவி கலெக்டர் ஆர்.கே.கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X