என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தூசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூசி அருகே மதுகுடித்ததை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவரின் மகன் சூரியகோட்டி (வயது 21). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்கவில்லை. சூரியகோட்டி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
தூக்கில் தொங்கிய அவர் அலறினார். அவரின் அலறல் சத்தத்ைதக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், சூரியகோட்டி இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து லட்சுமிகாந்தன் தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






