என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 58) இவரது மகள் கஸ்தூரி (40) இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் இரவு தங்கள் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி உள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் தாய் மற்றும் மகள் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றுதப்பி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் ஏ.எஸ்.பி.கிரண்ஸ்ருதி, தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் சிறிய தூரம் ஓடி நின்றுவிட்டது. இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது உள்ளூர் நபரா? வெளியூர் நபரா ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மற்றும் மகளிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஆனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, ஆரணி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத் பள்ளிக்கு மீண்டும் 3 நாள்விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஒவ்வொரு பவுர்ணமிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் கிரிவலம் சென்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
இதைத்தொடர்ந்து பவுர்ணமி முடிவடைந்ததும் கோவில் உண்டியல்களை திறந்து பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படும்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத நிலையில் சாமி தரிசனத்திறகு அனுமதி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் பவுர்ணமி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 15 ஆயிரத்து 309 வசூலாகி இருந்தது தெரியவந்தது.
மேலும் 268 கிராம் தங்கம், 221 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கொரோனா பரவலுக்கு முன்பு பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் எண்ணும் போது ரூ.1 கோடிக்கு மேல் காணிக்கை பணம் வசூலாகி இருக்கும். ஆனால் தற்போது கோவில் திறக்க பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதால் காணிக்கை பணம் கணிசமாக குறைந்துவிட்டது. இந்த மாதம் பாதி தொகையாக ரூ. 55 லட்சம் தான் வசூலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு கலெக்டர் முருகேஷ் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மாவட்டம் முழுவதும் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைக்க செய்து உலக சாதனை படைத்தார். இதற்காக 4 நிறுவனங்கள் உலக அங்கீகார சான்றுகளை சமீபத்தில் வழங்கின.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதன் பின்னர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் பெரும்பாலான பண்ணைக்குட்டைகள் நிரம்பி உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியானது.
இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து நீர்மட்டம் உயர செய்ததுடன், உலக சாதனை நிகழ்த்தியதற்காகவும் கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...பஸ்களில் இலவச பயண திட்டத்தில் 26 கோடி பெண்கள் பயணம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்






