என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி அருகில் உள்ள அழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.
Next Story






