என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    செய்யாறு அருகே கூலி தொழிலாளி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு

    செய்யாறு அருகே கூலி தொழிலாளி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வேலு மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் வீட்டைப் பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பி்ன்னர் மாலையில் வீடு திரும்பியபோது பூட்டி இருந்த கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரத்து 400 ரொக்கம்திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில் அனக்காவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×