என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருகே வீட்டு திண்ணையில் தூங்கிய தாய்-மகளிடம் நகை பறித்த கொள்ளையன்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 58) இவரது மகள் கஸ்தூரி (40) இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் இரவு தங்கள் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி உள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் தாய் மற்றும் மகள் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றுதப்பி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் ஏ.எஸ்.பி.கிரண்ஸ்ருதி, தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் சிறிய தூரம் ஓடி நின்றுவிட்டது. இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது உள்ளூர் நபரா? வெளியூர் நபரா ?என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மற்றும் மகளிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஆனந்தல் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்