என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆரணியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா- பள்ளிக்கு மீண்டும் 3 நாட்கள் விடுமுறை

    ஆரணியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கு மீண்டும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, ஆரணி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத் பள்ளிக்கு மீண்டும் 3 நாள்விடுமுறை அறிவித்துள்ளார். இதனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    Next Story
    ×