என் மலர்
திருப்பூர்
- அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது.
- அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகள் நீர்வரத்தை பெறுகிறது.
வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- முகமது இலியாஸ், ரபிக் நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம்.
- ரபிக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பூர்
திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (29) நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது ரபிக் தனது நண்பன் முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ரபிக் தலையில் பயங்கரமாக அடித்தார். மேலும் உடைந்த பாட்டிலை கொண்டு கழுத்து வயிறு உள்ளிட இடங்களில் சரம்மாரியாக குத்தினார்.இதில் பலத்த காயம் அடைந்த ரபிக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது அங்கிருந்து முகமது இலியாஸ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலை மறைவாக இருந்த முகமது இலியாசை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படை போலீசார் இன்று அதிகாலை வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற முகமது இலியாசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருப்பூரில் நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார்.
- எடப்பாடி பழனிசாமி மாரிமுத்து குடும்பத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மதுரை மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, மாரடைப்பால் இறந்த கட்சி தொண்டருக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, (48). அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார். மாநாடு நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து, திருப்பூர் குழுவினருடன் திருப்பூர் புறப்பட்டார்.
வேனில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தவரை சோதித்த போது, மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அதன்பின், உடலை திருப்பூர் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோரது பரிந்துரைப்படி, பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறந்த மாரிமுத்து, குடும்பத்துக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
- ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில், 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய ரோடுகள் அமைத்தல், வடிகால், சிறுபாலம், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல் உள்பட பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏதாவது, ஒரு திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணி என்ற வகையில் நடந்து வருகிறது. இதனால், நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு நிலவுகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு கவுன்சிலருமான கண்ணப்பன் பேசியதாவது:-
மாநகராட்சியின் மையப்பகுதியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கிய வார்டாக உள்ளது 44 வது வார்டு. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் இந்த வார்டில் எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஐம்பதாவது வார்டில் 39 பணிகளும், 51 வது வார்டில் 41 பணிகளும், 56 வது வார்டில் 44 பணிகளும், 33 வது வார்டில் 19 பணிகளும் நடைபெற்று உள்ளது. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டான எனது வார்டில் இதுவரை வெறும் 4 பணிகள் மட்டும் நடந்துள்ளது. காரணம் கேட்டால் 44 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் பக்கத்து வார்டான 51 வார்டிலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 41 பணிகள் நடந்துள்ளது. மேலும் 44 வது வார்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் பாதி தெருகளுக்கு தான் வந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் 300 கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை.
இந்நிலை நீடித்தால் வார்டு மக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் எந்த பாகுபாடு காட்டாமல் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.
- அடுத்த மாதம் 9-ந் தேதி சனிக்கிழமை, பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
- அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில், 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், புதிய ரோடுகள் அமைத்தல், வடிகால், சிறுபாலம், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல் உள்பட பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஏதாவது, ஒரு திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பணி என்ற வகையில் நடந்து வருகிறது. இதனால், நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு நிலவுகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடாவும் 44 வது வார்டு கவுன்சிலருமான கண்ணப்பன் பேசியதாவது:-
மாநகராட்சியின் மையப்பகுதியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கிய வார்டாக உள்ளது 44 வது வார்டு. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால் இந்த வார்டில் எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஐம்பதாவது வார்டில் 39 பணிகளும், 51 வது வார்டில் 41 பணிகளும், 56 வது வார்டில் 44 பணிகளும், 33 வது வார்டில் 19 பணிகளும் நடைபெற்று உள்ளது. ஆனால் அதிமுக கவுன்சிலர் வார்டான எனது வார்டில் இதுவரை வெறும் 4 பணிகள் மட்டும் நடந்துள்ளது. காரணம் கேட்டால் 44 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணிகள் முடிந்தவுடன் மற்ற பணிகள் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பக்கத்து வார்டான 51 வார்டிலும் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அங்கு 41 பணிகள் நடந்துள்ளது. மேலும் 44 வது வார்டில் 24 மணி நேர குடிநீர் திட்டம் பாதி தெருகளுக்கு தான் வந்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் 300 கடிதம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர் கூறும் குற்றச்சாட்டை கண்டு கொள்வதில்லை. இந்நிலை நீடித்தால் வார்டு மக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் எந்த பாகுபாடு காட்டாமல் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.
- நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட்- 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் 31-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- விழாவில் மொத்தம் 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்
திருப்பூர்:
தமிழ்நாடு பல்கலைக்கழக ங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில இளைஞர் விழா சென்னையில் நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விழாவில் மொத்தம் 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து 14 மாணவர்கள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 இளங்கலை இரண்டாமாண்டு வணிகவியல்மாணவர் மதுகார்த்திக்கும் ஒருவர். இவரை நேற்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணை ப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
- 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளுக்கு ஏற்றி சராசரியாக 4 நாட்கள் இடைவெளியில் வினியோகம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 20,30,44, 51 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டப்பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் குழாய் பதிக்கும் பணி பூமிபூஜை தொடக்க விழா 51-வது வார்டில் ஷெரீப் காலனியில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20,30, 44-வது வார்டுகளில் தொடர்ந்து பணிகள் நடைபெற உள்ளது.
குழாய் பதிப்பு மற்றும் இணைப்பு, குடிநீரை அளவீடு செய்யும் ஸ்கேடா கருவிகள் பொருத்துதல், மேல்நிலைத்தொட்டிகளில் தானியங்கி கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
- 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- சட்ட விதிகளை மீறி வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.
திருப்பூர்:
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் மற்றும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் வளரிளம் பருவ தொழிலாளர் தொழில் நிறுவனங்களில் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் சட்ட விதிகளை மீறி வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 6 நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட தடுப்பு படையின் மூலமாக இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- 3 மாதங்களுக்கு முன் நீலகிரி மக்களவை உறுப்பினரை வரவழைத்து 60 சென்ட் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றது.
- கோவில் நிலங்களை சமூக விரோதிகள் சிலா் தொடா்ந்து ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா்.
திருப்பூா்:
தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகாத சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சமூக விரோதிகள் சிலா் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா். கடந்த 3 மாதங்களுக்கு முன் நீலகிரி மக்களவை உறுப்பினரை வரவழைத்து 60 சென்ட் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றது.
இந்து முன்னணி மற்றும் பக்தா்களின் போராட்டத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதனிடையே கோவில் முன் அமைந்துள்ள மயில் வாகனத்துக்கு அருகில் உள்ள கோவில் நிலங்களை சமூக விரோதிகள் சிலா் தொடா்ந்து ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா். கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து சாக்கடை கால்வாய் வெட்டியுள்ளதுடன், சாக்கடை நீரை தேக்கி கோபுரம் சேதம் அடையும் வரையில் செயல்பட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக புகாா் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. தமிழகத்தில் கோவில்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது. திருமுருகநாத சுவாமி கோவிலின் நிலங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 வாகனங்கள் மூலம் சமையல் கூடத்திலிருந்து உணவு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
- நாளை 24 -ந் தேதி சமைத்த உணவு வகைகளுடன் வாகனங்கள் வெள்ளோட்டம் நடத்தப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 120 பள்ளிகளில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக உணவு சமைத்து, பள்ளிகளில் கொண்டு சென்று வழங்கும் விதமான பணிகளுக்கு திட்டமிடப்பட்டு அது குறித்த ஆய்வுக்கூட்டங்களும் நடைபெற்றது.இத்திட்டம் 5 குழுக்கள் தலைமையில் மேற்கொள்ள ப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 15 வாகனங்கள் மூலம் சமையல் கூடத்திலிருந்து உணவு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்காக முருகம்பாளையம் பள்ளியில் சோதனை ஓட்டம் நடந்தது. அதனை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், உதவி கமிஷனர் வினோத் கலந்து கொண்டனர். இப்பணி முழுமையாக மொபைல் செயலிகளில் பதிவேற்றம் செய்தும் சரி பார்க்கப்பட்டது.நாளை மறுநாள் 25ந் தேதி முதல் இத்திட்டம் தொடங்க உள்ளதால் நாளை 24 -ந் தேதி சமைத்த உணவு வகைகளுடன் வாகனங்கள் வெள்ளோட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
- தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இது வரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதியதொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியைப் பன்முக ப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திருப்பூர் கிளை அலுவல கத்தில் (டிஐஐசி.,பில்டிங் , தீயணைப்பு நிலையம் அருகில், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர் - 641603) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 21.8.2023 முதல் தொடங்கியது. 1.9.2023 வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி .ஐ .ஐ .சி -ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டிமானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை புதிய தொழில்முனைவோர்- தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0421 - 4238567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






