search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது - திருப்பூரில் விரைவில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம்
    X

    கோப்புபடம்

    குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது - திருப்பூரில் விரைவில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம்

    • 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளுக்கு ஏற்றி சராசரியாக 4 நாட்கள் இடைவெளியில் வினியோகம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 20,30,44, 51 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டப்பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் குழாய் பதிக்கும் பணி பூமிபூஜை தொடக்க விழா 51-வது வார்டில் ஷெரீப் காலனியில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20,30, 44-வது வார்டுகளில் தொடர்ந்து பணிகள் நடைபெற உள்ளது.

    குழாய் பதிப்பு மற்றும் இணைப்பு, குடிநீரை அளவீடு செய்யும் ஸ்கேடா கருவிகள் பொருத்துதல், மேல்நிலைத்தொட்டிகளில் தானியங்கி கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பணிகள் முடிந்ததும் விரைவில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் தொடங்கப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×