என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
    • பணியை தடுத்து நிறுத்திய பின்னர் கலைந்து சென்றனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி டவுன் பகுதியில் உள்ள முஸ்லீம்பூர் கே.கே தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் புதியதாக செல்போன் டவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது.

    இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாணியம்பாடி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    • 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்ய படவில்லை
    • 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி நல்லகிந்தனபள்ளி கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்ட ப்பட்டது.

    இதுவரை அந்த பள்ளத்தை மூடாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் 3 மாத காலமாக குடிநீரும் சரிவர விநியோகம் செய்ய படவில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாசரவண னிடம் புகார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பச்சூர்- குப்பம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைப்பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரசம் பேசினர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் டவுன் பழைய வாணியம்பாடி ரோட்டில் உள்ள பெட்டி கடையில், முகமது நபிஸ் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36) கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சரண் (27) என்பவரை ஏற்றிக்கொண்டு ஆம்பூருக்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது சின்ன கொமெஸ்வரம் வீர கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் சரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). இவர் கடந்த 4-ந் தேதி சிகிச்சைக்காக சி எல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மொப்பட்டில் சென்றார்.

    அப்போது செல்போன் மற்றும் தங்க கம்மல் ஆகியவற்றை பைக் சீட்டின் அடியில் வைத்து விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் இருந்த செல்போன் மற்றும் தங்க கம்மலை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியே வந்த பிரியங்கா மொபட்டின் சீட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அதிலிருந்த நகை மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் பிரியங்கா அங்கு பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார்.

    அப்போது அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நின்றிருந்த நபர் மொபட்டின் அருகில் வந்து ஆள் நடமாட்டம் இல்லாத போது அதிலிருந்து நகை மற்றும் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பிரியங்கா வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (45), என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்து சங்கரை சிறையில் அடைத்தனர்.

    • அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடந்தது.

    இதில் அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? சென்றடையாதவை ஏதேனும் இருந்தாலோ, பின்னடைவு இருந்தாலோ அதை சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் போட்டிகளை தொடக்கி வைத்தார்
    • முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கே. சி. வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி. செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ேஜாலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

    இதற்கு அறக்கட்டளை தலைவர் சுசிகர், செயலாளர் தென்னரசு, பயிற்சியாளர்கள் சபரிகுமார், ஏசுராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி. சேது ராஜன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க கவுரவத் தலைவர் எஸ். பி. சீனிவாசன், பொருளாளர் ஏ. பார்த்திபன் செயலாளர் எம். சிவப்பிரகாசம், தேர்வு குழு தலைவர் கே. மதன்குமார், உள்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம் .சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவில் ஆலங்காயம் நிம்மியம்பட்டு, வெள்ள க்குட்டை சுண்ணாம்பு பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    இந்த கன மழை காரணமாக நிம்மியம்ப ட்டிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அதே போல் வாணியம்பாடி நியூடவுன், பஸ்நிலையம், ஜனதாபுரம் , செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இந்த கனமழை யால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28).கூலி தொழிலாளி. இவருக்கும் நடராஜபுரத்தை சேர்ந்த சரவணன் (50). ஆட்டோ டிரைவர். என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் சரவணனுக்கும், செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    ஆத்திரமடைந்த சரவணன், செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சரவணன் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை நேற்று இரவு கைது செய்தனர்.

    • 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரெயில்வே ஊழியர். அவரது மனைவி இனியவள் (வயது 52) இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் குகன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஓய்வு பெற்ற சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் குகன் தந்தையின் ரெயில்வே பணியில் சேர்ந்தார். அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பைக்கில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

    இனியவள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    அங்கு வெடித்து சிதறிய வெடியின் துகள்கள் ஆகியவற்றை கைபற்றினர். நாட்டு சரவெடி வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 55). இவர் சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் ஈரோடுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை ரெயில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் அருகே வரும்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் ராஜீவ் காந்தி ரெயிலில் சிக்கி கால் துண்டானது. படுகாயம் அடைந்து அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த குடியான குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).

    நேற்று திடீரென இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டை விட்டு வெளியே ஓடினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் அருகே இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.

    இதனை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.

    ×