search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில்வே ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
    X

    வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டில் போலீசார் விசாரணை

    ரெயில்வே ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

    • 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ரெயில்வே ஊழியர். அவரது மனைவி இனியவள் (வயது 52) இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் பிரீத்தி என்ற 2 மகள்களும் குகன் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஓய்வு பெற்ற சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மகன் குகன் தந்தையின் ரெயில்வே பணியில் சேர்ந்தார். அவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் இனியவள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று இரவு பைக்கில் ஹெல்மெட் போட்டு கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது கம்பிகள் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பல்புகள் மற்றும் கதவு உடைந்து சேதமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

    இனியவள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனார்.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    அங்கு வெடித்து சிதறிய வெடியின் துகள்கள் ஆகியவற்றை கைபற்றினர். நாட்டு சரவெடி வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×