என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்து சேதமானது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த சின்ன குரும்பதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மஞ்சம் புல் பயிரிடப்பட்டுள்ளது.

    இன்று காலை மஞ்சம் புல்லில் மூலிகை தைலம் தயாரிப்பதற்காக முனுசாமி, சிவா, சீனு என்பவர்கள் 2 டன் பாயிலரை விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது பாய்லர் சூடுடாகி அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. பாய்லர் வெடித்து சிதறியதில் அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்தது இதில் வீடுகள் சேதமானது.

    அருகில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு பரிதாபமாக இறந்தது. முனுசாமி என்பவர் படுகாயம் அடைந்தார். பாய்லர் வெடித்து சிதறிதில் பொருட்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று விழுந்தது. படுகாயம் அடைந்த முனுசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    ஏலகிரி மலையில் வெளிநாட்டில் இருந்து வீரர்களை அழைத்து 'பாராகிளைடிங்' என்ற பறவை போல பறந்தபடி இயற்கையை ரசிக்கும் வசதி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

    'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து பாராகிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வையில் ரசிக்கலாம்.

    பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆஞ்ச நேயர் கோவில் அருகே 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் மத்தியில் பாராகிளைடிங் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் முடக்கப்பட்டது. தற்போது

    பாராகிளைடிங் சாகச பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

    இதனையடுத்து மீண்டும் பாரா கிளைடிங் தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், விண்ணில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    விரைவில் ஏலகிரி மலையில் பறக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெறும்' என்றார்.

    • திருப்பத்தூர் தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • வேலூரில் முப்பெரும் விழா நடக்கிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் ஆர்.எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி, எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை முன்னேற்ற வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மற்ற மாநிலங்கள் உற்றுநோக்கும் வகையிலும் பின்பற்றும் வகையிலும் திட்டங்கள் அமைந்துள்ளது.

    இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    வேலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு மாவட்டங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் என். கே. ஆர். சூரியகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, நகர செயலாளர் ம.அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1 படித்து வருகிறார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அடுத்த நாயக்னேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் தனது தாத்தா சின்னராஜ் என்பவரின் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலை தனது தாத்தாவிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ஏலகிரி மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமன போன சிறுமியை தேடி வருகின்றனர்.

    • பக்தர்களை அச்சுறுத்தியதால் நடவடிக்கை
    • காப்பு காட்டில் விடப்பட்டன

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தட்டல் அருகே உள்ள பைரப்பள்ளி, துருகம் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது.

    இங்கு சரஸ்வதி கோவில், நந்தி தேவர் கோவில், விநாயகர், நவகி ரகங்கள், சப்த கன்னியர், சீதாராமர், லட்சுமணர் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்ற னர். வனப்பகுதியில் கோவில்கள் அமைந்துள்ள தால் இங்கு ஏராளமான குரங்குகள் நடமாடி வருகின்றன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம் ஆகியவற்றையும் குரங்குகள் பறித்து செல்கின்றன.

    மேலும் பக்தர்களை காயப்படுத்தியும் அச்சுறுத்தி யும் வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய குரங்குகளை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆம்பூர் வனத்து றையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில் சுற்றி வந்த குரங்குகளை பிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே இரும்பு கூண்டுகள் வைக்க ப்பட்டன. இதன் மூலம் 45-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டுக்கு சிக்கின.

    பிடிபட்ட குரங்குகள் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் வி. கோட்டா சாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் கவுண்டன்யா வனவி லங்குகள் சரணாலய காப்பு க்காட்டில் விடப்பட்டன.

    இதை அறிந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.இருப்பினும் மீண்டும் குரங்குகள் வராமல் இருக்க கோவில் நிர்வாகம் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தார்வழிப் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 67). தனியார் ஷீ கம்பெனியில் காவலாளி. இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்படு சென்றார்.

    சாலையை கடக்கும் போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சல் லாரி குணசேகரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூரியர் பார்சல் லாரி டிரைவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்குதல் நடத்தியதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் என்பவர் ஊராட்சி துப்புரவு பெண் தொழிலாளி மணி மனைவி சிவகாமி (வயது 45) என்பவரை தாக்கியதாகவும், திட்டியதாகவும் கூறி பெரியங்குப்பம் ஊராட்சி 9-வது வார்டு துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 7 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பழைய மின்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட் (வயது 72). கூலி தொழிலாளி.

    நேற்று இரவு 7 மணி அளவில் வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சேட் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் சேட் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்து நிகழ்ந்தது.
    • இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க பொதுமக்கள் வலியுறுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கடலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (48). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வி 100 நாள் வேலைக்கு சென்றார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கி ருந்தவர்கள் உடனே செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மராட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், '100 நாள் வேலைக்கு செல்வோர் அவசரத்தில் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் செல்விக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும்' என்றனர். பணியின்போது பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுவாக 100 நாள் வேலை என்பது பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை, ஆற்று கால்வாய் போன்ற நீர் நிலை பகுதிகளில் தான் வேலை நடக்கும். அப்போது, பணியாளர்கள் வேலை செய்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷப்பூச்சி கடிப்பது, உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கொள்வது போன்றவை நடக்கிறது.

    அவ்வாறு நடக்கும் போது ஆஸ்பத்திரி செல்ல அதிக நேரம் ஆவதால் 100 நாள் வேலை நடக்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையிடம் ஒப்படைப்பு
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள மம்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரஷீத். இவர் வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளைத்து பிடித்தனர்.

    அதேபோல் நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்த ராணுவ வீரர் வினோத் வீட்டில் இருந்த 6 அடி நீலமுள்ள நாகப்பாம்பு, புதுப்பேட்டை பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவர் வீட்டில் புகுந்த 3 அடி நீளம் உள்ள நாக பாம்பு, ஆத்தூர்குப்பம் அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு உள்ளிட்டவை களையும் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

    பிடிபட்ட அனைத்து பாம்பு களையும் வனத்துறையினர் எடுத்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.

    • போலீசார் விசாரணை
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 18). பால் வியாபாரி. இவர் இன்று காலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பின் புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×