என் மலர்
திருப்பத்தூர்
- தரமற்ற முறையில் பராமரிப்பு பணி
- பொதுமக்கள் குற்றம் சாட்டு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டலவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு பணி முடிந்த பிறகு பயன்பாட்டுக்கு வராமல் திறப்பு விழாவுக்கு காத்திருந்தது.
சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் இன்று காலை திடீரென சீலிங் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. வகுப்பறை பயன்பாட்டுக்கு வராத தால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தரமற்ற முறையில் பராமரிப்பு பணி நடந்ததாகவும், அதனை தெரிந்தும் கூட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.
திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- 12 கிலோ போதைபொருள் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கையில் பையுடன் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் கடதுல்லா கிராமத்தை சேர்ந்த கிரி சாணி மகேஸ்வராவ் (வயது 28) என்பதும், இவர் பையில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
- துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது
- சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்ப டுகிறது.
இதில் 4-வது வார்டு மற்றும் 9-வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கழிவுநீர் எப்போதும் அதிக அளவு தேங்கியிருப்பதால், உடைப்பு ஏற்பட்ட பைக் வழியாக கழிவுநீர், குடிநீரோடு கலக்கிறது.
இதனை சற்றும் கவனிக்காத பொதுமக்கள், கடந்த ஒரு வாரமாக கழிவு நீர் கலந்த குடிநீரையே குடிப்பதுடன், சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பயன்பா டுகளுக்கும் உபயோகித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, மணிமாறன், ஜெயபால், விக்கி, சாமு, மாதேஸ்வரன், விமல், கலையரசன், மாதேஸ்வரி உள்ளி ட்டோருக்கு திடீரென மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபா தைகள் ஏற்பட்டது.
அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் உள்ளவர்க ளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, அந்த வழியாக குடிநீரோடு, கழிவுநீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கவனிக்காமல் பொது மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் திடீரென உடல் பாதிப்புகள் ஏற்பட காரணம் என தெரிய வந்தது.
இதனை அடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமை யில் சுகாதாரத் துறையினர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பரி சோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.
மேலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 43),கட்டிட மேஸ்திரி.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணபதி(36) என்பவருடன் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி பைக்கில் சென்றார்.
அப்போது சுண்ணா ம்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் செல்வராஜை தேடி வருகின்றனர்.
- கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி ஆர்த்தி. கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனா ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
சூர்யா மற்றும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் பெண்ணின் தாய் நிர்மலா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் மனைவி குழந்தையை பெண்ணின் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சூர்யா கட்டிட வேலைக்கு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9 -ந் தேதி சூர்யா மாமியார் வீடான கலர் வட்டத்திற்கு வந்து 3 நாட்களாக அங்கேயே தங்கினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆர்த்தி தன் கை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் இருவரும் ஆர்த்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கை குழந்தையுடன் காணாமல் போன ஆரத்தியை தேடி வருகின்றனர்.
மேலும் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 38), விவசாயி.
இவரது மனைவி நித்யா (31). தம்பதியினர் 2 பேரும் நேற்று தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, நித்யாவின் காலில் கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை மீட்டு சிகிச்சை க்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஜோலார்பேட்டை:
ஆந்திர மாநிலம் திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ஹிமா (வயது 23), நடன கலைஞர். தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தார். ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் ஹிமா உள்பட 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கினர்.
இந்த நிலையில் இன்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய பெண் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்து சேதமானது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த சின்ன குரும்பதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மஞ்சம் புல் பயிரிடப்பட்டுள்ளது.
இன்று காலை மஞ்சம் புல்லில் மூலிகை தைலம் தயாரிப்பதற்காக முனுசாமி, சிவா, சீனு என்பவர்கள் 2 டன் பாயிலரை விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது பாய்லர் சூடுடாகி அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. பாய்லர் வெடித்து சிதறியதில் அருகே இருந்த வீட்டின் மீது கற்கள் விழுந்தது இதில் வீடுகள் சேதமானது.
அருகில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு பரிதாபமாக இறந்தது. முனுசாமி என்பவர் படுகாயம் அடைந்தார். பாய்லர் வெடித்து சிதறிதில் பொருட்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று விழுந்தது. படுகாயம் அடைந்த முனுசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
ஏலகிரி மலையில் வெளிநாட்டில் இருந்து வீரர்களை அழைத்து 'பாராகிளைடிங்' என்ற பறவை போல பறந்தபடி இயற்கையை ரசிக்கும் வசதி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து பாராகிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வையில் ரசிக்கலாம்.
பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆஞ்ச நேயர் கோவில் அருகே 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் பாராகிளைடிங் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் முடக்கப்பட்டது. தற்போது
பாராகிளைடிங் சாகச பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து மீண்டும் பாரா கிளைடிங் தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், விண்ணில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
விரைவில் ஏலகிரி மலையில் பறக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெறும்' என்றார்.
- திருப்பத்தூர் தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- வேலூரில் முப்பெரும் விழா நடக்கிறது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அவை தலைவர் ஆர்.எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி, எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை முன்னேற்ற வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மற்ற மாநிலங்கள் உற்றுநோக்கும் வகையிலும் பின்பற்றும் வகையிலும் திட்டங்கள் அமைந்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு மாவட்டங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் என். கே. ஆர். சூரியகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, நகர செயலாளர் ம.அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-1 படித்து வருகிறார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
ஆம்பூர் அடுத்த நாயக்னேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் தனது தாத்தா சின்னராஜ் என்பவரின் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி காலை தனது தாத்தாவிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏலகிரி மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமன போன சிறுமியை தேடி வருகின்றனர்.






