search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த ஆந்திர வாலிபர் கைது

    • 12 கிலோ போதைபொருள் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கையில் பையுடன் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் கடதுல்லா கிராமத்தை சேர்ந்த கிரி சாணி மகேஸ்வராவ் (வயது 28) என்பதும், இவர் பையில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×