என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
9-ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து பள்ளியில் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிருந்தா (வயது 14). அதேப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 'மாணவி பிருந்தா பள்ளி சீருடையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். வீட்டிற்கு வரும்போது அவர் கவலையோடு வந்துள்ளார். வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை.
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் பிருந்தா சகஜமாக பேசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து போலீசார் அவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் ஏதாவது மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நடந்ததா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்