என் மலர்
நீங்கள் தேடியது "Snakes caught"
- 15 அடி நீளமுள்ள 2 பாம்புகள் பிடிக்கப்பட்டது
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிந்தா புரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்ப வர்தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
நேற்று தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தபோது தொழிற்சாலை பின்புறம் சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது 15 அடி நீளமுள்ள 2 மலைப் பாம்புகள் மற்றும் ஒரு பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி ஜாப்ரபாத் பகு தியில் உள்ள பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தொழிற்சாலையில் இருந்த 3 பாம்புகளை பிடித்து வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ் என்பவரின் வீட்டினுள்ளே திடிரென சத்தத்துடன் பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே சின்னூர் பகுதியில் வசித்து வரும் சீனு என்பவரின் வீட்டில் பாம்பு நுழைந்தது கண்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- வனத்துறையிடம் ஒப்படைப்பு
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள மம்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரஷீத். இவர் வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளைத்து பிடித்தனர்.
அதேபோல் நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவை சேர்ந்த ராணுவ வீரர் வினோத் வீட்டில் இருந்த 6 அடி நீலமுள்ள நாகப்பாம்பு, புதுப்பேட்டை பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவர் வீட்டில் புகுந்த 3 அடி நீளம் உள்ள நாக பாம்பு, ஆத்தூர்குப்பம் அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு உள்ளிட்டவை களையும் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட அனைத்து பாம்பு களையும் வனத்துறையினர் எடுத்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.






