என் மலர்tooltip icon

    தேனி

    • குடும்ப பிரச்சினைகள் காரணமாக 3 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பைப் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    நாகேஸ்வரி கோபித்துக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மேலும் மது குடித்து விரக்தியில் இருந்த பாண்டி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்து விட்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே தே.லெட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். தேவாரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அபிநயா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த வாரம் தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை பெய்தது. குறிப்பாக கேரளாவில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

    மழை தொடர்ந்து பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. தமிழக பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் வைகை அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 505 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49 அடியாக உள்ளது நீர் வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.8, தேக்கடி 3, சண்முகா நதி அணை 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி "தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எஸ்.ஆர்.ஜி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அஸ்விதா முதல் பரிசும், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் மோகன்பாபு 2-ம் பரிசும், சில்லமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜனனி 3-ம் பரிசும் பெற்றனர்.

    மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 55 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் உத்தமபாளையம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி காயத்ரி முதல் பரிசும், கெ.கல்லுப்பட்டி, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு அப்ராபானு 2-ம் பரிசும், வைகை அணை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி ரூபிகா 3-ம் பரிசும் பெற்றனர்.

    கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10000, 2-ம் பரிசாக ரூ.7000, 3-ம் பரிசாக ரூ.5000 என்ற வகையில் மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

    போடி டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் திடீரென சின்னமனூர்-கம்பம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது36). இவரது மனைவி சங்கீதா. கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால் சங்கீதா கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற த்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக மனுத்தாக்கல் செய்து விட்டு சின்னமனூர் தேரடி பகுதிக்கு வந்தார். அப்போது சங்கீதா, அருண்குமார் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறு விசாரணைக்கு ஆஜரா கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வராததால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுபடி சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பளியன்குடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகள் ரஞ்சனி (வயது 14). இவர் ஆதிவாசி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவரை அவரது தாயார் பள்ளிக்குச் செல்லுமாறு கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    கண்டிப்புடன் தனது மகளை பள்ளியில் சென்று மாணவியின் தாய் விட்டுள்ளார். மாலையில் வீடு திரும்பிய மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர் கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். குடி ப்பழக்கத்துக்கு அடிமை யானதால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேதனையடைந்த தெய்வேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் 3-வது வார்டு மூணுசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). கூலித் தொழிலாளி. இவரது மாமனார் கடந்த 10-ந் தேதி இறந்து விட்டார். அந்த இறப்புக்கு இவரது மனைவி மற்றும் மகன்கள் சொல்லா மல் சென்று விட்டனர்.

    இதனால் வேதனை யடைந்த சுதாகரன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    • இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.
    • பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. 115 அடியில் இருந்த அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 120 அடியை எட்டியது.

    ஆனால் தற்போது மழையின் தாக்கம் குறைந்து ள்ளதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 50.13 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. வரத்து 778 கன அடி. திறப்பு 356 கன அடி. இருப்பு 2628 மி.கன அடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2010 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.36 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.2, தேக்கடி 1.6, கூடலூர் 1.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.8, போடி 2.6 வைகை அணை 4, சோத்து ப்பாறை 3.5, மஞ்சளாறு 9.8, பெரியகுளம் 9, வீரபாண்டி 3.4, அரண்மனைபுதூர் 8, ஆண்டிபட்டி 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

    காந்திகிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளி அமைந்துள்ளது. வனத்துறையினர் தடை காரணமாக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கரடு முரடான பாதை என்பதால் மோட்டார் சைக்கிள்களையும் இயக்க முடியாது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் 2 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ளது. எனவே பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடும் என்பதால் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி வரை நடந்து சென்று வருகின்றனர். இதே போல பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும் மாலையில் பள்ளி முடிந்து வரும்போது இருட்டி விடுவதாலும் குழந்தைகள் அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

    பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமம் வரை முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் செல்வ நாயகபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பிரதீபா (வயது17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளிேய சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்த செல்வம் மகள் பாவனா (16). பிளஸ்-1 படித்து வருகிறார். செல்வத்திற்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் பிரிந்து விட்டனர். செல்வம் மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவரையும், காஞ்சனா ஊத்துப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

    பாவனா தனது பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார் . இது குறித்து அவரது தாத்தா சந்திரன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    லோயர்கேம்ப் நாரா யணன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மாமியா ருக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்கு ம்போது ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து குமுளி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்ட மக்கள் மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை.

    தேனி:

    தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் ராஜன் மத்திய ரயில்வே துறைக்கும், சென்னையில் உள்ள ரயில்வே டிவிஷனல் மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மதுரை-போடி ரயில் பாதையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஐ.டி.ஐ மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தேனி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பலர் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் தற்போது உள்ள ரயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களுக்கு வரவும் கூடுதல் நேரமாகிறது. அதுபோல ஆட்டோ கட்டணமும் கூடுதலாக செலவாகிறது.

    எனவே மீண்டும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். அங்கு ரயில் டிக்கெட் புக்கிங் அலுவலகமும் திறக்க வேண்டும். மேலும் தற்போது மதுரை-போடி இடையேயான முன்பதிவு இல்லாத பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் தேனி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளுக்காக மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக காலையில் போடியில் இருந்து 7.30 மணிக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கு வருவதற்கு 6 மணிக்கும் பேசஞ்சர் ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ×