என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 20 நாட்களாக செல்போன் நெட்ஒர்க் இயங்காததால் மக்கள் அவதி
- 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர்அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஹைவே விஸ் பேரூராட்சி.
இந்த பேரூராட்சிக்கு ட்பட்டு மேகமலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவை தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு 6500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் இயங்காத தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சிக்னல் கிடைக்காமல் அவசர தேவையான ஆம்புலன்ஸ்சை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மலை கிரா மங்களில் வெளியு லகத்தின் தொடர்பு இல்லா மல் துண்டிக்க ப்பட்டது போல் பொதுமக்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். நெட்ஒர்க் பிரச்சினை சீரமைக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் இந்த புகாருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.






