search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் பலி : 11 பேர் படுகாயம்
    X

    கோப்பு படம்

    சின்னமனூரில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் பலி : 11 பேர் படுகாயம்

    • ஷேர் ஆட்டோவில் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்றனர்.
    • விபத்தில் பெண் பலியானார். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரைச் சேர்ந்த வர் நரசிங்கபெருமாள் என்ற ரவி (வயது 40). சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இன்று காலை தனது ஆட்டோவில் வேலைக்கு செல்லும் 12 பெண்களை ஏற்றிக் கொண்டு சென்றார். வேப்பம்பட்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவி ழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

    ஆட்டோவில் இருந்த டிரைவர் ரவியின் மனைவி ஷோபனா (39) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சின்ன மனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×