search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது
    X

    10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

    • சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி அனுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 68). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் வலுக்கட்டாயமாக உறவுக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினாள்.

    சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×