search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூர் : அரசு ஆஸ்பத்திரியில் கஞ்சா விற்பனை அமோகம்
    X

    கோப்பு படம்

    சின்னமனூர் : அரசு ஆஸ்பத்திரியில் கஞ்சா விற்பனை அமோகம்

    • கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
    • இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்துபோதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.

    இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள உறவினர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா, மது விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×